*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

புதன், 13 ஜனவரி, 2010

என்னிலிருந்து வெளியேறும் ஒருவன்

த. அஜந்தகுமார்

ழித்தாண்டவனாய்
எனக்குள் ஒருவன்
சுற்றிச் சுழற்றி
என்னை ஆட்டியபடி....

மனம் அதிர்ந்து
கண் கனிந்து
கை பதறி
கால் நடுங்கி
நான் சோர்ந்து வீழ
அவனின் ஆட்டம்
உக்கிரம் கொள்கிறது


நாயின் வாலாய்
என்னை நிமிர்த்த முடியாது
திணறித் திகைத்தபடி இ;
உக்கிரம் கொள்கிறேன்
சில கணங்களில் விழித்தபடி!


அவனின் உக்கிரம்-
எனது உக்கிரம்-
உக்கிரத்தின் உற்பவிப்பில்
அவன் வெளியேறுகிறான்

நிமிடங்கள் எரிந்து வீழ
அவன் மீன்டும் வந்து
யாதொன்றும் வாய்வாளாது
'தீதெண்று" ஏதோ என்னித் தேம்பித்திரும்பினான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner