த. அஜந்தகுமார்
ஊழித்தாண்டவனாய்
எனக்குள் ஒருவன்
சுற்றிச் சுழற்றி
என்னை ஆட்டியபடி....
மனம் அதிர்ந்து
கண் கனிந்து
கை பதறி
கால் நடுங்கி
நான் சோர்ந்து வீழ
அவனின் ஆட்டம்
உக்கிரம் கொள்கிறது
நாயின் வாலாய்
என்னை நிமிர்த்த முடியாது
திணறித் திகைத்தபடி இ;
உக்கிரம் கொள்கிறேன்
சில கணங்களில் விழித்தபடி!
அவனின் உக்கிரம்-
எனது உக்கிரம்-
உக்கிரத்தின் உற்பவிப்பில்
அவன் வெளியேறுகிறான்
நிமிடங்கள் எரிந்து வீழ
அவன் மீன்டும் வந்து
யாதொன்றும் வாய்வாளாது
'தீதெண்று" ஏதோ என்னித் தேம்பித்திரும்பினான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஜந்தகுமாரின் கவிதைகள்
அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.
குப்பிழான் ஐ.சண்முகன்




0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக