த. அஜந்தகுமார்
முடிவற்றுத் திறக்கிறது
நமது இரகசியங்களின்
உள்ளறைகள்
ஒரு புள்ளியில் தொடங்கும்
நம் கதைச்சித்திரம்
மீண்டும் அந்தப் புள்ளியில்
கால் புதைக்கிறது
சுவாரசியங்களில்
பொழுதுகள் தின்னப்பட
நமது கதிரைகளைக்
கதைகள் நிறைக்கின்றன
காற்று கேசத்தைத் தொட்டு
வருடிச் செல்லும் உணர்வில்
தொற்றிக் கொள்ளும் சொற்கள்
இறுகக் கைபற்றி
என் முகம் பார்க்கின்றது
இழை பிரிந்த
மௌனங்களிடம்
காயங்கள் ஏதும் இருக்குமேவென்று
நான் கவலைப்பட ,
நீ சிரித்த சிரிப்பில்
மின்னல் வெட்டியது
மழை பொழிந்தது
மழை நனைத்த நிலமாய்க்
குளிர்ந்தது கால்
கைகளின் நடுக்கத்தை மறைக்க
காற்சட்டைப் பொக்கற்றுக்குள் கைநுழைத்து
வான் பார்த்தோன் பார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஜந்தகுமாரின் கவிதைகள்
அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.
குப்பிழான் ஐ.சண்முகன்




2 கருத்துரைகள்:
வாசித்தேன். வாழ்த்துக்கள்.
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் என் நன்றி.
கருத்துரையிடுக