*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

புதன், 6 அக்டோபர், 2010

இது கவிதை அல்ல: கவலை


 த.அஜந்தகுமார்

உனது சைக்கிளைப் பற்றியே
நீ ஓயாது கேட்டுக் கொண்டிருந்தாய்
நான் எனது சைக்கிளைக் கொண்டு வந்து
உன்னருகில் விட்டேன்
நீ சைக்கிளை என் தலை கோதுவது போல்
மெதுவாகத் தடவினாய்
உன் தெரியாத கண்கள்
கோபத்தினால் அலைக் கழிந்தன

சைக்கிளைத் தள்ளிவிட்டாய்

எதுவும் செய்ய முடியாது
சைக்கிளை எடுத்துச் சென்றேன்

என்னால் உன் முன்னால்நிற்க முடியவில்லை
நான் உன் முன்னால்நிற்பதாய் நினைத்து
கைகளை வீசினாய்
ஏதேதோ வாய்மொழிகள் கோபத்தில் கத்தினாய்

என் செய்வேன் நான்
கதிரையில்

தலை குத்தி இருந்தேன்

பின் விறாந்தையில்
தூசுகள் நடுவே
சாத்தப்பட்டிருந்த
சைக்கிளைப் பார்த்தேன்
கம்பிகள் துருப் பிடித்திருந்தன
றிம்மும் ரயரும் பாவிக்க முடியாததாய்...
இருக்கை காகம் கொத்தியதைப்போல போல ஒரு தோற்றமாய்
அம்மாவுக்காய் போட்ட கரியல் யாரும் இருக்கமுடியாததாய்

ஓடித்திரிந்த சைக்கிளும்
அப்பா நீ முடங்கிய போது தானும் முடங்கிவிட்டது
இப்போது நீயும் உன் சைக்கிள் போலவே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner