*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமார் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக தொகுத்து வெளியிடும் சிறுகதைத்தொகுதி விரைவில் வெளிவருகிறது*

பேசியபடியிருத்தல்


கவிதைகள் உன்னைச் சுற்றியே திரிகிறது

காற்றின் திசைகளில் கவிந்து கிடக்கும்
உன் திருமுகத்தை
நினைவின் ஆழ் சுழிகளில் மூழ்கி முத்துகிறேன்

எனது வலிகள் ஒப்பிக்க முடியா மொழியில்
கீறிக் கிளர்கிறது

நினைவடங்கா வெளியில்
நனவுகளின் இரத்தம் பரவுகிறது

மாறிக் கொண்டிருக்கும் காட்சி
இயலுமையின் கைகளிலும் இயலாமை

குருஷேத்திரம் நிகழ்ந்தபடியிருக்க
புறாக்கள் இரத்தச் சிறகுகளோடு காதல் கொள்கின்றன

நீயும் நானும் வெளிகளில் வீசப்பட்டிருக்கிறோம்

உனது திசையை நானும்
எனது திசையை நீயும்
முகர்ந்தபடி .......
கால நாக்கில் ஒட்டப்பட்டிருக்கிறோம்

வாரத்தைகள் நமதானவை

எங்கிருந்து பேசினாலும்
நாம் முகம் பார்த்துப் பேசியபடியிருக்கிறோம்

2006

3 கருத்துரைகள்:

raheema faizal சொன்னது…

''எங்கிருந்து பேசினாலும்
நாம் முகம் பார்த்துப் பேசியபடியிருக்கிறோம்''

nice Ajantha kumar

Garunyan சொன்னது…

இலக்கணப்பிழை. ஒருமை பன்மை விகுதி அமைதி குன்றியுள்ளது.
இலக்கணம் மீறிய கவிதையாகக் கொள்ளலாம்.
எனினும் கவனம் இருத்தல் அவசியம்.
நல்ல கவிதை
காருண்யன்.

Garunyan சொன்னது…

அதாவது கவிதைகள் என்றால் திரிகின்றன என்றும்
வலிகள் என்றால் கிளர்கின்றன என்றுமே வரும்.

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Fish