*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

உயிர் தொங்கும் வாழ்க்கை


த.அஜந்தகுமார்


கதவை அடித்துச் சாத்திவிட்டு

குண்டி காட்டிப் போகிறார்கள்

நெளித்தபடி.


கோபத்தில் கைகள்

நடுங்குகின்றன


உள்ளங்கை வியர்க்கிறது

கதவை இழுத்துத் திறந்து

காற்றில் குளிக்கிறேன்

கனவுகளில் மாத்திரம்!


விழிப்பின் நினைவில்

சுவர்கள் நெருங்கி

என்னை நொருக்க

மூச்சு முட்ட முட்ட

சாவின் விளிம்பில்

முனகியபடி தொங்குகிறேன் .






திங்கள், 26 ஏப்ரல், 2010

உன்னைப் பற்றி நான் எழுதும் இறுதிக் கவிதை


.அஜந்தகுமார்


எப்படியோ மீண்டும் மீண்டுமாய்
உன்னை நினைக்கத் தூண்டும் வாழ்க்கை!
நான்
நினைக்க மறுத்தாலும்
ஏதோவொன்றின்
பொறியில் இருந்து
மூண்டு
மிளாசி வளர்கிறாய்

எனது கண்களில் குத்தி இறங்கி
வலிகளைத் தந்துவிட்டுப் புன்னகைக்கிறாய்
நானே
என்னில் கோபப்பட்டும்
உன்னை
எறிந்து விடமுடியாத துக்கத்தில்
………………………………………..
..................................
எதையுமே
விட்டு வைக்காமல்
யோசித்துத்
தொலையும் மனதில் உள்ள
உனது
சுவடுகளில்
தேங்கித்
ததும்பும் கண்ணீரில்
உன்
முகம்தான் தெரிகிறது

உன்னை வேறொருவன் நிறைத்துவிடப் போகும் வாழ்வில்
உன்னை
என்னை விட்டு
எறியாது
இருக்கும் துரோகத்திற்கு
நான் என்ன செய்வது?
……………………..
…………………......
உன்னைப்
பற்றி நான் எழுதும்
இறுதிக்
கவிதையாய் இது இருக்கட்டும்

26042010 2216

புதன், 7 ஏப்ரல், 2010

எங்கள் ஊரிலும் நாலு வேட்பாளர்கள்



---த.அஜந்தகுமார்

என்னுடன் படித்த இரண்டு நண்பர்களின் முகங்கள்
சுவர்களில் சிரிக்கின்றன
மிக அழகான படங்கள் என்று
அவர்களிடமே சொல்லியிருந்தேன்

எனது ஊரிலும் நாலு வேட்பாளர்கள்
நாலு சின்னங்களில்!

தங்கள் வல்லபத்தை எல்லாம்
உடம்பெல்லாம் வாயாக்கி
அவர்கள் சொல்வதைக் கேட்டு
நான் ஒவ்வொரு முறையும் புல்லரித்திருக்கிறேன்

ஒவ்வொருவரிடமும்
ஒரு மந்தகாசப் புன்னகையோடு
“உம்மையன்றி வேறோர் கதியில்லை’
என்பேன்
ஒன்பது அப்பங்களையும்
தாமே தின்று ஏப்பமிடும்
அவர்களின் பெருங்கனவு நாளையுடன்
உடைந்து விடப்போகிறதே என்று மிகவும்
துக்கிக்கிறேன்
மின்னலென அவர்களிடம் பிரகாசித்த
சமூக அக்கறை
நாளையுடன் மறைந்துவிடுமே என்று
தடுமாறுகிறேன்
எனக்கு கொஞ்சக் காலமாய்
பொழுது போனதே தெரியவில்லை
பல நகைச்சுவை நிகழ்ச்சிகள்
நாளையுடன் முடிகிறது என்று
என் நாத் தழுதழுக்கிறது
எப்பொழுதுமே
தேர்தல் காலமாய் இருந்தால் எவ்வளவு
மகிழ்ச்சியாய் இருக்கும் என்று
என் மனம் சின்னக்குழந்தையாய் ஏங்குகிறது


07042010
23546

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner