*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

புதன், 27 மே, 2015

என்னிடம் இல்லாத் திறப்புகள்



காயங்களிடை
கரைகிறது
காதல்
கரைகிற காதலே
செமித்து மருந்தாகி
இனிக்கிறது

சொற்களில்
தடக்கி விழுகிறது
வாழ்வு!
சொற்களால்
எழுகிறது வாழ்வு
கோயிலாய்!

தன்முனைப்புற்றுத்
தருக்குகிறது
மனம்!
முனையுடைந்து
மூர்க்கங் கரைந்து
குழைகிறது மனசு!

விழுங்கும்
விருப்பங்கள்
புதைகிறது தொண்டையில்!
தொண்டை வீங்கி
சொற்கள் உடைகின்றன
கற்கண்டாய்!

நோயில் வீழ்ந்ததாய்
நொருங்கிக் கூனுகின்றேன்
காற்றில் பறப்பதாய்
கனவில் செருக்குகிறேன்

கால்களை முறிப்பதுவே
கைத்தடியும் தருகிறது
வாலினை நறுக்குவதே
வாலினையும் ஆட்டுது

மனசின்
கதவுத் திறப்புகள்
மடியினில் இல்லை
பூட்டுவதும் நானில்லை
திறப்பதுவும் நானில்லை
உள்ளிருப்பதுவே நான்!

1 கருத்து:

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner