*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

திங்கள், 9 ஏப்ரல், 2012

வலிகளை விசாரியாதீர்


வலிகளைப் பழக்கிக் கொண்டவர்கள்
தங்கள் பாதைகளில்
வலிகளை
வழித்துணை ஆக்கினர்
கண்களில் கசிந்த நீரினை
வியர்வையில்
மறைய வைத்தனர்
முதுகில் சுமையும்
நெஞ்சில் சுமையும்
நிர்ந்தரியாய் இருப்பதை மறந்தனர்
விசாரிப்புகளில்
மற்றவர்கள்
சொல்லும் போதே
தங்கள் வலிகள்
நினைவுக்கு வந்து அழுதனர்

ஓலமிட்டழுத கதைகள்
ஒதுங்கிக் கிடந்தன
ஈரம் இன்னும் பிசுபிசுக்கிறது
ஈரத்தில் தலைசாய்க்கிறார்கள்
கண்கள் மூடப்பட்டு இருக்கிறது
ஈரம் எப்பொழுதும் நினைவுபடுத்து்ம்
உணர்வுகள் இடையே 
துாக்கமும் சாத்தியமாகவே செய்கிறது
கனவுகள் தேவையற்றதாகிவிட்டன
குப்பைகளுடன் கனவுகளும் இருக்கட்டும்
பூனை விராண்டிக் கொண்டிருப்பது போல்
ஏதேதோ நடக்கிறதுதான்
ஆனால் எல்லாமே 
நடக்கவே செய்கிறது

வலிகளுடன் வாழ்பவனை நீ விசாரியாதே
புண்ணை மூடும் தோலினை
சுரண்டிப் பார்க்காதே
கண்ணீர்க் கதைகளை கேட்டு
கண்ணீரில் ஏன் கதைகளை எழுத வைக்கிறாய்
விட்டு விடு

விசாரிக்கப்படாமலே
வலிகள் இருக்கட்டும்

வைரத்துடன் 
நாளை அவர்கள் வருவார்கள்

வைரம் அவர்களின் அழகைப் பேசும்
வெற்றியின் கதையை
அவர்கள் அப்போது பேசட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner