*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

சனி, 13 பிப்ரவரி, 2010

ஓவியத்தில் காணமுடியாக் கோடுகள்


---த.அஜந்தகுமார்

இன்றிந்தத் தினமதில்
எந்தன் நெஞ்செங்கும்
உந்தன்
நினைவெழுதும் நெடுங்கதைகள்

நட்பின் சுருதியில் நனைந்து கிடந்த
நம் வாழ்விடை
துளிர்த்த….
புரியாத அன்பின் புதிர்ப் பக்கங்களால்
நான் மூடப்பட்டு இருக்கிறேன்

கோடுகள் வரைந்து சென்ற
ஓவியத்தில்
மீண்டும் என்னால்
கோடுகளைக் காணமுடியவில்லை

நட்பின் சுருதி நனைத்த
உன் ஓவியத்தில்
இன்னும் கசங்காது உள்ளது
ஏதோவொன்று.

எந்தப் பெண்ணைக் கடந்து செல்கையிலும்
அம்மா எனக்காய்ப் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிலும்
உன்னை எண்ணாது இருக்க முடிவதில்லை.

மிக இரகசியமாய்
மீண்டும் உனக்கு
என்னைக் காட்ட முடியா
அவஸ்தை பிழிபட
நான் - இந்த நான் வாழ்கிறேன்

14022010
1127 am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner