*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

புதன், 12 ஜூன், 2013

தாயின் ஓலத்தால் சிதறுண்ட ஜன்னல் கண்ணாடிகள்

காயம் பட்ட நிலத்தில்
நான் வீசப்பட்டிருந்தேன்

தழும்புகளாய் இருந்த தேகநிலம்
என்னை நெருடுகிறது
விழிகள் சுணைத்துக் கொள்ள
ஒரு தாயின் கண்ணீர்
என்னை நனைக்கிறது

ஒரு தம்பியாய் ஊடாடிய
உறவின் அன்பில்
தன் பிள்ளைகள் இழந்த துயர்
சொல்லி அழுகிறாள்

சுனையில் இருந்த
எனது காயங்கள்
உப்பில் இருந்தே உறைந்து
உலைக்கின்றன என்னை

.....................................



உங்களது பிரிவாலான கண்ணீர்
என்னில் உப்பு மூட்டையாகிக் கனக்கிறது

உப்பு மூட்டை சும மாமா என்று
ஓடி வந்து தொற்றும் பிஞ்சுகள்
கண்ணீரினாலான உப்பு மூட்டையாய்
என் நெஞ்சில் கனக்கிறார்கள்

................................


தாயின் ஓலம்
என்னைப் பிளக்கிறது

காயங்களால் நிறைந்திருந்த
எனது அறையெங்கும்
ஓலங்களால் சிதறுண்ட
ஜன்னல் கண்ணாடிகளை
பொறுக்கி
இன்னொரு மூட்டையாய்க் கட்டி
என் முதுகில் தாருங்கள்


...............................



உப்பு மூட்டை சும என்ற
அவர்கள் இல்லை

கண்ணீராலான உப்பு மூட்டை இருக்கிறது
தாயின் ஓலம் உடைத்த கண்ணாடித் துண்டுகளின்
மூட்டை இருக்கிறது

ஒன்று நெஞ்சில் கனக்கிறது
ஒன்று நெஞசைக் கிழிக்கிறது

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner