*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

புதன், 6 அக்டோபர், 2010

 த.அஜந்தகுமார்

அவள் என்னைத் தொடர்வதை
தாங்க முடியவில்லை
தாங்கமுடியாத வெயிலாய்
நிழல்களைத் துவம்சம் செய்யும் நீலக் கண்களுடன்
பரபரத்துத் தொடர்கிறாள்
ஒடுங்குகிறேன்
ஓடுகிறேன்
எனினும் குறுஞ்செய்தியில்
தவறிய அழைப்பில்
என்னைச் சலிப்படைய வைக்கிறாள்
தேவதைகள் பற்றிய அத்தனை கனவுகளையும்
ஏப்பம் விட்டிருந்தாள்
எனது கைபேசியை உடைத்துவிட்டேன்
யாருடனும் கதைப்பதைத் தவிர்க்கிறேன்
எனினும்
அவள் பரப்பும் கதைகளை
காதுகள் கேட்கின்றன
இரக்கமற்ற அவள்
என் மீது காதல் பொழிகிறேன் என்கிறாள்
எந்தத் தேவதைகளும் பேய்களும்
வாராது அடைக்கும் கதவு எங்குள்ளது?
அறியத் தருவீரா ?
இந்த வெயிலில் இருந்து தப்ப
குடை வேண்டும்

(இக்கவிதையில் சில திருத்தங்களுக்கு உதவிய கவிஞர் திருமாவளவனுக்கு நன்றி)

2 கருத்துகள்:

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner