*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

என்னோடு உறையும் வாள்




---த.அஜந்தகுமார்


கையில் மினுங்கியபடி
தயாராய் இருக்கிறது
எனது வாள்

என்னைக் கூர்மைப்படுத்தவும்
யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லவும்
என்னைத் தேவையற்றுத் தொடர்பவர்களைப்
பயமுறுத்தவும்
நான் நடந்து செல்லும் பாதைகளைத்
தூய்மைப்படுத்தவும்

தயாராய் இருக்கிறது எனது வாள்

துருப்பிடித்துப் போன
கத்திகளுடன் அலைபவர்கள்
என் வாளைப் பற்றிய
கேள்விகளை முணுமுணுத்தபடி
செல்வதைக் காண்கையில்
என் நரம்புகள் தெறிக்கின்றன

துருப்பிடித்த கத்திகளையும்
பிடித்த கைகளையும்
என் வாள்கள் துண்டாட
அதிக நேரம் வேண்டியதில்லை

எனினும் பொறுத்திருக்கிறோம்
மினுங்கும்
என் வாளும்
நானும். 16022010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner