*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

திங்கள், 26 ஏப்ரல், 2010

உன்னைப் பற்றி நான் எழுதும் இறுதிக் கவிதை


.அஜந்தகுமார்


எப்படியோ மீண்டும் மீண்டுமாய்
உன்னை நினைக்கத் தூண்டும் வாழ்க்கை!
நான்
நினைக்க மறுத்தாலும்
ஏதோவொன்றின்
பொறியில் இருந்து
மூண்டு
மிளாசி வளர்கிறாய்

எனது கண்களில் குத்தி இறங்கி
வலிகளைத் தந்துவிட்டுப் புன்னகைக்கிறாய்
நானே
என்னில் கோபப்பட்டும்
உன்னை
எறிந்து விடமுடியாத துக்கத்தில்
………………………………………..
..................................
எதையுமே
விட்டு வைக்காமல்
யோசித்துத்
தொலையும் மனதில் உள்ள
உனது
சுவடுகளில்
தேங்கித்
ததும்பும் கண்ணீரில்
உன்
முகம்தான் தெரிகிறது

உன்னை வேறொருவன் நிறைத்துவிடப் போகும் வாழ்வில்
உன்னை
என்னை விட்டு
எறியாது
இருக்கும் துரோகத்திற்கு
நான் என்ன செய்வது?
……………………..
…………………......
உன்னைப்
பற்றி நான் எழுதும்
இறுதிக்
கவிதையாய் இது இருக்கட்டும்

26042010 2216

2 கருத்துகள்:

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner