*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

உயிர் தொங்கும் வாழ்க்கை


த.அஜந்தகுமார்


கதவை அடித்துச் சாத்திவிட்டு

குண்டி காட்டிப் போகிறார்கள்

நெளித்தபடி.


கோபத்தில் கைகள்

நடுங்குகின்றன


உள்ளங்கை வியர்க்கிறது

கதவை இழுத்துத் திறந்து

காற்றில் குளிக்கிறேன்

கனவுகளில் மாத்திரம்!


விழிப்பின் நினைவில்

சுவர்கள் நெருங்கி

என்னை நொருக்க

மூச்சு முட்ட முட்ட

சாவின் விளிம்பில்

முனகியபடி தொங்குகிறேன் .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner